Wednesday, October 17, 2018

History meets religion

• தி ஹிந்து நாளிதழில் 2007ம் ஆண்டு மே 5ம்தேதி இராமாயணச்சாவடி பற்றி வந்த செய்தி

MAY 05, 2007 00:00 IST
UPDATED: JULY 18, 2011 17:07 IST

[Ramayana Chavadi is Goddess Meenakshi's abode for a day]
          • References about Madurai in the Halasya Mahatmyam, Thiruvilayadal Puranam and other classic literature and its trading links with ancient Greeks and Romans trumpet its antiqueness and ancient traditional legacies that have been passed on to generations together.True to its antiquity, the Temple City has much more to explore. One such structure is the Ramayana Chavadi on North Masi Street. Tucked between the age-old Krishna Temple and Chellathamman Temple, Ramayana Chavadi like several other structures in the city, has an interesting history to narrate.One of the oldest resident of North Masi Street, P. Varadarasan, says that though the exact origin of Ramayana Chavadi is not known, it is believed that Thottakari Meenakshi donated it for the benefit of her community Thousand House Yadavas (Aayiram Veetu Yadavavarkal).
Donation
For some reasons, `Chavadi' and 'Aatu Thottlil' were brought to auction for defaulting tax payment. Thottakari Meenakshi, an old lady who distributed curd and buttermilk took possession of the properties. When King Thirumalai Naicker enquired about her desires she said she wanted Goddess Meenakshi to stay in the Chavadi for a day during the Chithirai Festival."This is the one of the two places where Goddess Meenakshi stays for an entire day. It falls on the fifth day of the 12-day Chithirai festival. The other place is Villapuram Pavarkai Mandagapadi," says Mr. Varadarasan. But there is a difference. At Villapuram Pavarkai Mandagapadi deposit has to be paid whereas for Ramayana Chavadi there is no such requirement.
• Inscription
      The Chavadi has an inscription and a pattayam that was handed over by King Thirumalai Naicker. It has the sanction for Goddess Meenakshi's stay. The Chavadi has another unique history. Sri Sathguru Palani Nachimuthu Siva Narayana Desika Swamigal, also known as Palani Samiar and Yadava Madathipathy, who constructed the Idayan Madam at Palani, stayed at Ramayana Chavadi during 19th century. He also collected Yadavas of North Masi Street to construct a Krishna Temple. After installing the moola vigraha in the temple, the Palani Samiyar attained Samadhi at Puttuthoppu.
• Religious harmony
      The Chavadi stands as a symbol of religious harmony with Lord Dhandayuthapani and Lord Rama. Besides, the Chavadi also houses the portrait of Sri Sathguru Palani Nachimuthu Siva Narayana Desika Swamigal and many believe that Chavadi was constructed at the initiative of the Swamigal.Though the inscription found on the floor dates back to 1881-2-9, the consecration was held in 1949 with a few added features such as statues of Jawaharlal Nehru, Netaji Subash Chandra Bose and Mahatma Gandhi.
• Origin of name
   Ramayana was read out to people for inculcating morals in them. Though other meeting places or `chavadis' such as Pitchai Pillai Chavadi, Maravar Chavadi were named after the community, Chavadi on North Masi Street owned by Yadavas was named after the activity, says Mr.Varadarasan.The simple structure with 16 beautifully carved pillars served the purpose of a community centre that provides space for the residents to convene meetings to discuss issues threadbare, says V.R. Suryanarayanan, another resident of the area."Even disputes that were not resolved were settled here because people were first made to listen to the story and morals highlighted in Ramayana. There was always a consensus by the end of the meeting, " he says and adds that the 350-year-old structure stands as a testimony to Thousand House Yadavas, who live in 58 villages in and around Madurai.The Chavadi houses a statue of Lord Vinayakar that was donated by King Thirumalai Naicker. Later, to suit its name, the statues of Lord Rama and Lord Dhandayuthapani were installed in 1945, he says.The `Chavadi' or the community centre that was once a meeting place slowly turned into a marriage hall. But soon again, it again became a meeting centre.   The doors of Chavadi opens only to accommodate Goddess Meenakshi, Goddess Chellathamman and Sri Krishna during the festival time of the respective temples.Besides, the Chavadi has a space for various other Vahanas of Lord Krishna and a cow yard at the back and a Nachimuthu Karuppaasamy Temple in its right corner.

Reporter. S.S.KAVITHA

தகவலை பதிவு செய்தவர்:  ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் E.P.I. இராம சுப்பிரமணியன்

Monday, October 1, 2018

இராமாயணச்சாவடி இடையர்கள் (பகுதி - 7)


மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒரு இடம் இல்லாதது ஒரு குறைபாடாக இருந்தது. இக்குறைபாட்டினை நீக்கும் பொருட்டு திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து கி.பி.1899 ஆம் ஆண்டு சிம்மக்கல் அருகில் திரு.வி.க சாலையில் 92 சென்ட் இடத்தினை வாங்கினர். அன்றிலிருந்து அந்த இடத்தை ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் அடைப்பதற்கும், ஆடுகள் வியாபாரம் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கி.பி.1924 ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பளித்தது. வழக்கை தொடுத்தவர்கள் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியப்பட்டது என்று  தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கு தொடுத்தவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். இந்த முறை இரு தரப்பாரும் கலந்து பேசி சமாதான உடன்படிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை டிரஸ்ட் கி.பி.1927 ல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் டிரஸ்டியாக திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1927 முதல் கி.பி 1947 வரை டிரஸ்டியாக பணியாற்றினார். பின்னர் இரண்டாம் டிரஸ்டியாக இ.சுடலைமாடக்கோனார் கி.பி 1947 முதல் 1953 வரை பணியாற்றினார். பின்னர் மூன்றாம் டிரஸ்டியாக வீ.சி.பி.வீரண்ணக்கோனார் கி.பி 1953 முதல் 1988 வரை பணியாற்றினார்.
இவர் காலத்தில் 
பக்தியில் சிறந்த ஆயிர வீட்டு யாதவ சமுதாய மக்கள் டிரஸ்ட் மூலமாக இறைத்தொண்டாற்றிட எண்ணினர். அதன்படி வடக்கு மாசி வீதி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் கோவில் ஸ்ரீஜயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவத்தை டிரஸ்ட் சார்பில் நடத்துவதாக முடிவு செய்தனர். ஆட்டு மந்தை சார்பாக (ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை)
அச்சமூகத்தினரின் தெய்வமான ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கான ஸ்ரீஜயந்தி 8ம் நாள் உத்ஸவத்திற்காக (மன்மத வருடம் ஆவணி 31ம் தேதி) 16-09-1955ம் வருடத்தில் அழகர் தங்கக்குதிரையை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஆலவாய் நகருக்குள் கொண்டு வந்தனர். அது வரை கட்டைக்குதிரையில் புறப்பாடு கண்ட ஸ்ரீநவநீதகிருஷ்ணனுக்கு தங்கக்குதிரையில் புறப்பாடு கண்டார் (ஆதாரம்- ஆட்டுமந்தையின் அலுவலக அறையில் அழகர் குதிரையில் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் எழுந்தருளி வீதியுலா கண்ட புகைப்பபடம் உள்ளது)

 வீ.சி.பி.வீரணக்கோனார் காலத்தில் அழகரின் தங்கக்குதிரையை முன் மாதிரியாகக் கொண்டு கி.பி.1957 ல் புதிதாக வெள்ளிக்குதிரை
 வாகனம் செய்யப்பட்டது. 
இந்த புதிய வெள்ளிக்குதிரை விளம்பி வருடம், ஆவணி மாதம் 16ம் தேதி, 01.09.1958 ல் ஸ்ரீநவநீதகிருஷ்ணருக்காக அலங்காரம் செய்து முதன்முதலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
அதன்படி அன்று முதல் இன்று வரை நவநீதகிருஷ்ணன் கோவில் ஸ்ரீஜயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவம் டிரஸ்ட் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
வெள்ளி குதிரை வாகனம் தற்போது ஆட்டுமந்தையில்  பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஜயந்தி 8ம் நாளன்று இராமாயணச்சாவடிக்கு வானவேடிக்கையோடு வெள்ளிக் குதிரையை அழைத்து கொண்டு வருவர்.
• மதுரை பாத்திமா கல்லூரி அருகில் உள்ள வழி விடும் நரசிங்கப்பெருமாள் கோவிலில் 'புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை' பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் ஆட்டுமந்தை ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அன்று ஒரு நாள் மட்டும் பெருமாள் விக்ரகத்தைத் தொட்டு பூஜை செய்பவர் இந்த இடையர் சமூகத்தைச் சேர்ந்தவர். சில தலைமுறைகளுக்கு முன் இந்த இடையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து நரசிங்கபெருமாள் விக்ரகத்தை கண்டெடுத்து, அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வழிவிடும் பெருமாள் கோவிலை உருவாக்கினார். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மட்டும் பெருமாளைத்தொட்டு பூஜை செய்து வருகின்றனர். தற்போது விக்ரகத்தை கண்டெடுத்தவரின் பேரனாகிய 'மங்கான் பெரியசாமி கோனார்' என்பவர் தற்போது பூஜை செய்து வருகிறார். அன்று ஒரு நாள் மட்டும் கோவிலில் வழக்கமாக பூஜை செய்து வரும் பிராமணர் பூஜை செய்வது இல்லை.


A.V.M.வீரணக்கோனார் கோர்ட் ரிசீவராக இருந்தபோது 09-07-2001 ல் இராமாயணச்சாவடி மற்றும் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயில் ஆகியவற்றிற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது
என்கிற தகவலோடு மேலும் இந்த ஆய்வை மேலும் தொடர விரும்பாமல்
நிறைவுப்பகுதியை மிகச் சங்க்ரஹமாக சுருக்கியுள்ளேன். 'ஒற்றுமையே பலம்' என்று மற்ற சமூகங்களுக்கு பாடமாக இருந்த இந்த 'புதுநாட்டு இடையர்கள்' தங்களுக்குள்ளேயே போட்டி,பொறாமை,ஓரவஞ்சனை கொண்டு வீழ்ச்சியை நோக்கி 'சிவப்புக் கம்பளம்' விரித்து க்ஷீண கதியடைந்த இச்சமூகத்தினரைப் பற்றி மேலும் விவரிக்க எனக்கு மனம் இயலவில்லை.

• 5000 வருடங்களுக்கு முன்பு காந்தாரி மற்றும் கர்க ரிஷி தந்த சாபத்திலிருந்து  இந்த புது நாட்டு இடையர்கள் கண்ணனின் அருளால் தப்பித்து....  இதுவரை வந்து விட்டனர்.

இனி..... ... ..... ....

|ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்|

•|நிறைவுற்றது|•

•••இந்த காலவெளிப்பயணத்தில் இராமாயணச் சாவடி இடையர்களின் காலச்சுவடுகளை சேகரிக்க என்னோடு பயணித்த என் ஆருயிர் நண்பர், வைணவச்செல்வன், 'திருக்கூடல். செ.ஜகந்நாத பராங்குச தாஸர்' இந்த ஆய்வுப்பயணத்திற்கு ஊக்குவித்து உற்ற துணையாக இருந்தார்.

இந்த ஆய்வுக் கட்டுரை உருவாக பல நுட்பமான செய்திகளைத் தந்த
• தெய்வத்திரு. வே.நா.திருமால்சோலைமணி தாத்தா மற்றும்
• திரு. பட்டி.கே.பாலகுரு,
• திரு. கோடாங்கி செல்லையாக்கோனார்
• திரு. நாகேந்திரக் கண்ணன்(யாதவர் கல்லூரி),
• திரு. அ.வீ.நவநீத கிருஷ்ணன்(அண்ணா),
• டிரில் மாஸ்டர் திரு. சௌந்தர்ராஜன் நாயுடு, மற்றும்
• திரு. கோவிந்த ராமாநுச தாஸர் ஆகியோர்கள் பெரும் நன்றிக்கு உரித்தானவர்கள்.

• திரு. பி.பிரசன்னா
• கோடாங்கி செல்லையாக்கோனார் மகன்          திரு. செ.சுந்தர்,
• திரு. அ.வீ.பா.அசோக் குமார்
• திரு. பிருத்திவிராஜன் (எ) நந்து
• திரு. ஆயர்.தி.குமார்,
• திரு. ந.தெய்வேந்திரக் குமார்,
போன்றோர் கள ஆய்வில் பல உதவிகள் செய்தனர்.

            அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



இராமாயணச் சாவடி இடையர்கள் (பகுதி - 6)


  கோயில் கோபுரங்களில் பொதுவாக
 பல்வேறு புராண ரீதியான கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள இந்த  இராமாயணச்சாவடி கிழக்கு பகுதி முகப்பில் 'காந்திஜி,நேருஜி,நேதாஜி'
மூவரும் உள்ளனர். மேலும் மகான்களின் சிலைகளாக 'சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர், நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள், சுவாமி விவேகானந்தர், அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகள்(வள்ளலார்)' ஆகியோரின் சுதைச்சிற்பங்களும் சாவடி முன் முகப்பில்  காணலாம்.
மேலும் இராமாயணச்சாவடி இடையர்கள் உறவின் முறை சார்ந்த ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயில் கோபுரத்தில் 'மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி' ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. இராமாயணச்சாவடி இடையர்கள் தேசியத் தலைவர்களை தெய்வங்களுக்கும்  நிகராக அல்லது மேலாக மதித்து கோயில் கோபுரத்தில்  07-07-1949 ல் இடம் பெறச் செய்துள்ள இச்செயல் தமிழ்நாட்டில் பலரையும் ஆச்சர்யமூட்டியது.
 புஷ்டியான தோள் கொண்டு   சண்டைக்கு நிற்கும் குஸ்தி பயில்வான்களாக இராமாயணச்சாவடி  பகுதி இடையர்கள்  வாழ்ந்துள்ளததற்கான காலச்சுவடுகளை 'நினைவுச்சின்னமாக' ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயில் இராஜகோபுர சிற்பத்தில் மேற்கு பாகத்தில் உள்ள சிற்பம் உள்ளது. மதுரையில் புகழ்பெற்ற பிரண்ட்ஸ் ஜிம் நிறுவனரான 'திரு.மா.வ.சுப்பிரமணியக் கோனார்' சிறந்த குஸ்தி பயில்வான் ஆவார்.

இராமாயணச்சாவடி சிலவருடங்களுக்கு முன்பு வரை கல்யாண மண்டபமாகவும் இருந்தது. இது பொருளாதார வசதியற்றவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக, வசதியாக இருந்தது.
சில காரணங்களால் தற்போது இராமாயணச்சாவடி பெரும்பாலும் பூட்டப்பட்டே உள்ளது. இராமாயணக்கதை சொல்லப்பட்ட இடம் என்கிற அளவில் வழக்கொழிந்த அடையாளமாகவே சாவடி உள்ளது.

• சித்திரை திருவிழாவில் 5ம் நாள் தங்ககுதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் இச்சாவடியில் எழுந்தருளுகின்றனர்.
• திருக்கூடல் திவ்யதேசத்து கூடலழகர் வைகாசி ப்ரம்மோத்ஸவம் 4ம் நாள்
இந்த சாவடியில் எழுந்தருளுகிறார்.
• திருக்கூடல் மலை ஸ்ரீநவநீதப்பெருமாள் சுவாமி ஆடிமாதத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் இச்சாவடியில் காட்சி தருவாராம்
• வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயில் தைமாதம் 9ம் திருவிழா திருத்தேர் உற்வசத்தன்று இரவு இந்த சாவடியில் தங்கி நாடகம் பார்த்து மறுநாள் மஞ்சள் நீராட்டு நடை பெறுவது சிறப்பாகும். (திருவிழா சமயம் சாமி வந்து இறங்கி மக்களுக்குக் காட்சி கொடுக்கும் போது இரவு வள்ளி திருமணம் நாடகம் முன்பு நடக்குமாம்.)
• ஆவணி மாதம் ஸ்ரீஜயந்தி உத்ஸவ காலங்களில் சாவடி திறக்கப்படுகிறது.
• தண்டாயுத பாணிக்காக பிரதிமாதம் கார்த்திகை நட்சத்திரம்,பிரதிமாத வளர்பிறை,தேய்பிறை சஷ்டி, கந்தர்சஷ்டி ஆறு நாட்கள் சாவடி திறக்கப்படுகிறது.
• விநாயகர் சதுர்த்தியன்று 'திருமலை விநாயகர்' வழிபாட்டிற்காக சாவடி திறக்கபடுகிறது.
• ஸ்ரீராமநவமி காலங்களில் ஸ்ரீராமர் வழிபாட்டிற்காக சாவடி திறக்கப்படுகிறது.

[REFERENCE. FROM:-
'The Hindu' News Paper Article by S.S.Kavitha

(History meets religion)
Dated: MAY 05, 2007
....The simple structure with 16 beautifully carved pillars served the purpose of a community centre that provides space for the residents to convene meetings to discuss issues threadbare, says V.R. Suryanarayanan, another resident of the area."Even disputes that were not resolved were settled here because people were first made to listen to the story and morals highlighted in Ramayana.
....he says. The `Chavadi' or the community centre that was once a meeting place slowly turned into a marriage hall. But soon again, it again became a meeting centre. The doors of Chavadi opens only to accommodate Goddess Meenakshi, Goddess Chellathamman and Sri Krishna during the festival time of the respective temples.]
எனது வைணவத்தோழரும், கதாகாலட்சேப அதிகாரியுமான திருக்கூடல் செ. ஜகந்நாத பராங்குச தாஸர் மூலம் வைணவப்பற்றுள்ள அடியேனின் சிறு முயற்சியாக |"ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு", மற்றும் "ஏத்துகின்றோம் நாத்தழும்ப ராமன் திருநாமம்"| ஆகிய தலைப்புக்களில் இரு நாட்கள் (20.06.2010 & 04.07.2010) வைணவ நடைமுறையில் உபன்யாசம் நடத்தப்பட்டது.

சாவடியின் வெளியே ஈசான்ய மூலையில்(வடகிழக்கு) நாச்சிமுத்து கருப்பண்ணசாமிக்கு தனிக்கோயில் உள்ளது.
நாச்சிமுத்து கருப்பண்ணசாமிக்கு ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமைக்கு "சந்தன சாற்றுப்படி' நடக்கும். இந்த கருப்பசாமியின் சிறப்பு என்று சொல்வதெனில் வாயுக்குத்து வந்து மிகவும் கஷ்டப்படுபவர்கள் "நாச்சிமுத்துக் கருப்பா மூச்சுக்குத்தை வாங்குப்பா"
என்று மூன்று தடவை கூறி வழிபட்டால் மூச்சுக்குத்து நீங்குவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இந்த நாச்சி முத்து கருப்பண்ணசாமி ஸ்ரீலஸ்ரீ சிவநாராயண தேசிகர் எனும் நாச்சிமுத்து பழனிச்சாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கோடாங்கி செல்லையாக்கோனார் அவர்களின் வாய்மொழித்தகவலாக 02.08.2012 ல் களஆய்வின் போது சந்தித்த போது கூறினார்.

மதுரையிலேயே வடக்கு மாசிவீதி பகுதியில் தான் அதிகமான சுதந்திர போராட்ட தியாகிகள் உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இராமாயணச்சாவடி பகுதி இடையரான 'திரு.ஏ.வி.செல்லையாக்கோனார்'
 ஒரு தலைசிறந்த நாட்டுப்பற்றாளர். மதுரை நகர சுதந்திரப் போரட்ட வீரர்களை ஒன்றிணைத்து அந்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் செல்லையாக்கோனார் ஆவார்.
 இவர் தன்னுடைய சுதந்திரப் போரை 1930இல் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் தொடங்கினார். 1942லும் புரட்சியில் பங்கு கொண்டு சிறை சென்றார். இவர் ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்று இருந்திருக்கிறார். 1942இல் ஒரு குண்டு வீச்சு சம்பவம். அதில் உயிர் இழந்திருக்க வேண்டிய இவர், மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தார். அந்த குண்டு வீச்சினால் இவர் தலையில் ஏற்பட்ட தழும்பு கடைசி வரை இருந்தது.
இவருடைய சகோதரர் 'திரு. அணுகுண்டு ஏ.வி.அய்யாவு' அவர்களும் பிரபலமான சுதந்திர போராட்டக்காரர்
ஆவார்.  இவரும் பிரிட்டிஷாரை எதிர்த்து பலமுறை சிறை சென்றிருக்கிறார்.  மதுரையில் வைணவர்கள் பெரிதும் கொண்டாடும் மேங்காட்டுப் பொட்டல் (மெய் காட்டும் பொட்டல்) என்னுமிடத்தை 'ஜான்சி ராணி பூங்கா'வாக மாற்றியதற்கும், திண்டுக்கல் ரோடு என்றிருந்ததை 'நேதாஜி ரோடாக' மாற்றியதற்கும் காரணமாக இருந்தவர்  இவரே ஆவார். மேலும் (கிருஷ்ணராயர் தெப்பகுளம்) ஞாயிற்றுக்கிழமை சந்தையை 'திலகர் திடல்' என மாற்றியதும் இவரே.
அந்நாளைய சென்னை மாகாண முதல்வர் பெருந்தலைவர் திரு. காமராசரின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவராக அணுகுண்டு அய்யாவு இருந்தார். அதன் காரணமாக வடக்கு மாசி வீதி பகுதியில் இவரது அடுத்த தலைமுறை தேசியவாதி இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கத்தலைவராக இருந்த
'திரு.இ.பெ.பாலச்சந்தர்' (E.P.) அவர்களை வழிநடத்தியதன் மூலம்  'காமராசர் எழுச்சி மன்றம்' என்கிற சமூகநலன் கொண்ட அமைப்பு பிற்காலத்தில் உருவாவதற்கும் இவரே தூண்டுகோலாக  இருந்தார்.
 பகுத்தறிவாளரான நடிகவேள் திரு. எம்.ஆர்.ராதா மதுரையில் நடத்திய 'கீமாயணம்' நாடகத்தை எதிர்த்த பெருமைக்குரியவர். பிற்காலத்தில் நடிகவேள் அவர்களுடன் சமரசம் ஏற்பட்டு 'உலகம் சிரிக்கிறது' என்கிற படத்திலும் நடித்தார்.
சினிமா ஜோதி, அணுகுண்டு ஆகிய பத்திரிக்கைகளையும் நடத்தியவர். மதுரையில் பிச்சைக்காரர்களை அழைத்து மாநாடு நடத்தி அன்றைய அரசியல் மேல்மட்டத்து தலைவர்களின் கவனத்தையே திருப்பி புரட்சி செய்தார்.
திருமணம் செய்து கொள்ளாது தேசத்திற்காக  போராடிய ஒரு முக்கிய பெருமையும் இவருக்குண்டு.
இவர்களுக்கு அடுத்து பதுமைக் கம்பெனி திரு.வீரணக்கோனார்
சுதந்திர போராட்டங்களில் (வடக்கு மாசி வீதியில்) பெரும் பங்கு வகித்த
மற்றொருவர் ஆவார்.

தொடர்ச்சி அடுத்த பதிவு-Post ல பார்ப்போம்

                 அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

இராமாயணச் சாவடி இடையர்கள் (பகுதி - 5 )


இவ்வாறு இடையர்கள் மதுரையில் குடியேறியபின்பு ஒருமுறை திருமலைமன்னர் வீதியுலாவாக பிற்காலங்களில் இராமாயணச்
சாவடியாக அறியப்பட்ட 'இராவான சாவடி' வழியாக (இரவு கள்ளர் திசைக்காவல் சாவடி)
 வந்தபோது களைப்பு  ஏற்பட்டதால் சாவடிக்குள் சற்று ஓய்வெடுத்தார். சாவடியருகே
தயிர் மற்றும் நீர்மோர் விற்கும் இடைச்சியான 'தோட்டக்கார மீனாட்சி' எனும் கிழவி தந்த நீர் மோரில் தாகசாந்தி பெற்ற திருமலை மன்னர் கிழவியிடம் 'அம்மா! உனக்கு என்ன வேண்டும் கேள்?,தருகிறேன்!' என்று கேட்டாராம். அந்த கிழவியும் இராவான சாவடியை பரிசாக கேட்டாளாம். மேலும் சித்திரைத்திருவிழாவில் 5ம் திருநாள்  அன்று இந்த இடையர் தெரு சாவடியில் தங்கி இடையர்களை அருள்பாலித்து விட்டுச் செல்ல மன்னரை  வேண்டினாளாம். மன்னரும் அதற்கான கட்டளையை இட்டு, சித்திரை 5ம் நாள் திருவிழாவிற்கான செலவை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசர் தேவஸ்தானமே ஏற்கவேண்டும் என தாமிர சாசனத்தை எழுதி தோட்டக்கார மீனாட்சியிடம் தந்தாராம். (குறிப்பு:- 2012 ம் ஆண்டு வரை  பணம் கட்டாமலேயே இராமாயணச் சாவடி இடையர்கள்  நடத்தினர்.)


மேற்க்கண்ட தோட்டக்கார கிழவி கதைக்கான ஆதாரம்
REFERENCE. FROM:-
'The Hindu' News Paper Article by S.S.Kavitha
(History meets religion)
Dated: MAY 05, 2007

........One such structure is the Ramayana Chavadi on North Masi Street. Tucked between the age-old Krishna Temple and Chellathamman Temple, Ramayana Chavadi like several other structures in the city, has an interesting history to narrate. One of the oldest resident of North Masi Street, P. Varadarasan, says that though the exact origin of Ramayana Chavadi is not known, it is believed that
'Thottakari Meenakshi' donated it for the benefit of her community Thousand House Yadavas (Aayiram Veetu Yadavavarkal).
Thottakari Meenakshi, an old lady who distributed curd and buttermilk took possession of the properties. When King Thirumalai Naicker enquired about her desires she said she wanted Goddess Meenakshi to stay in the Chavadi for a day during the Chithirai Festival."This is the one of the two places where Goddess Meenakshi stays for an entire day. It falls on the fifth day of the 12-day Chithirai festival. The other place is Villapuram Pavarkai Mandagapadi," says Mr. Varadarasan. But there is a difference. At Villapuram Pavarkai Mandagapadi deposit has to be paid whereas for Ramayana Chavadi there is no such requirement.
The Chavadi has an inscription and a pattayam that was handed over by King Thirumalai Naicker. It has the sanction for Goddess Meenakshi's stay. The Chavadi has another unique history.

மதுரை வீதிகளை காவல்காக்கும் காவலர்கள்(பிறமலைக்கள்ளர்கள்) இரவு இராமாயணச்சாவடியில் வந்து தங்குவதைப்பற்றி சாகித்ய அகாதமி விருது பெற்ற 'காவல்கோட்டம்' எனும் நாவலில் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
திருமலைநாயக்கரால் இடையர்களுக்கு தரப்பட்ட 'இராவான சாவடி'யானது சிறிய வடிவில் இருந்து கல் மண்டபமாக 02-09-1881ல் மறுகட்டுமானத்தில் மாறியது.
 இராமாயண கதாகாலட்சேபம் இங்கு அதிக முறை நடந்ததால் இதனை இராமாயணச்சாவடி என்று பரவலாக அழைக்கத் தொடங்கியதன் விளைவாக (தருமத்துப்பட்டி செப்பேட்டில் உள்ளபடி)
திசைக்காவலர்கள் தங்கும் இராவான (Night) சாவடி காலப்போக்கில் மதுரை சுற்று வட்டார மக்கள் மனதில் 'இராமாயணச் சாவடி' என்றே பதிய ஆரம்பித்தது. இந்த இராமயணச்சாவடியில் அக்காலத்தில் எல்லோருக்கும் கல்வியறிவில்லாததால் இராமாயணக் கதைகளை ஒருவர் வாசிக்க மற்ற எல்லோரும் கேட்பார்களாம். ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தன்று மதுரையில் கனமழை பெய்யும் என்று 15.08.2012 களஆய்வின் போது தெய்வத்திரு. வே.நா.திருமால் சோலைமணி தாத்தா கூறியது இங்கு நினைவிற்கு வருகிறது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே சாவடிக்குள் இராமாயணம்,பாகவதம், என சாதி பேதமின்றி இடையர்,மறவர்,பிள்ளை,ஐயங்கார் என பலரும் படித்து வந்தனர்.  சங்கர மூர்த்திக்கோனார் என்பவர் ஸ்ரீமத் பாகவத அம்மானையினை கி.பி.1817ம் ஆண்டு நடந்த வைகுண்ட ஏகாதசியன்று இந்த இராமாயணச் சாவடியில் அரங்கேற்றினார் என்கிறார் பேராசிரியர் தொ.பரம சிவன்.  (ஆதாரம்: ஆய்வு நூல்- அழகர் கோயில்  -பக்கம் 171 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியீடு-முதற்பதிப்பு:1989) இந்த  சாவடியில் மின் விளக்கு கண்டுபிடிக்காத காலத்தில் தீப்பந்தங்களை வைத்துக் கொண்டு இராமாயணம் படிப்பார்களாம். அழகர் பற்றிய பாடல்களை  இராகத்தோடு இசைப்பார்களாம்.


இதிகாச, புராண கதாகாலட்சேபம் நடத்தும் இடமாக ஆன்மீகச் சான்றோர்களும், ஆங்கிலேயர்களை எதிர்க்கும் அரசியல் தலைவர்களுக்கு ரகசிய களமாகவும் இராமாயணச்சாவடி  19,20 ம் நூற்றாண்டுகளில்  பயன்படுத்தப்பட்டது.
சாவடியின் உள்ளே சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இராமபிரான், திருமலை விநாயகர், தண்டாயுதபாணி ஆகிய கடவுள்களின் வழிபாட்டு சிலைகளும் உள்ளன. 
சிவநாராயண தேசிகர் (எ) நாச்சிமுத்து பழனிச்சாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், கற்றங்குடி ரெட்டி சுவாமிகள் மூக்கையா சுவாமிகள் போன்ற மகான்கள் தங்கிய, உலாவிய பகுதி இதுவாகும்.






சுமார் கி.பி.16-17ம் நூற்றாண்டுகளில் சிறிய அளவிலாக காட்சியளிக்கப்பட்ட கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் 1909ம் ஆண்டில் பெரியகோயிலாக கட்டும் முயற்சி நடந்தது. (இன்றைய கோயிலின் கிழக்குவாசலில் ஒரு சிறிய கோயிலில் கிழக்குத் திருமுக மண்டலமாக "கம்பத்தடி கிருஷ்ணன்" இருந்தார். கம்பத்தடி தற்போதைய கோயிலின் வடக்கு வாசல் பகுதியில்  உள்ளது. ) 1909ல் கட்டப்பட்ட பெரிய கோயிலுக்குள் கம்பத்தடி கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்ய இந்த இடைச்சமூக பெரியோர்கள் 'எட்டு பேர்கள்' முயற்சி செய்தனர்.
சிலையை அசைக்கக் கூட முடியவில்லை. கடப்பாரை கம்பிகளும் கூட வளைந்தனவாம். அப்போது பழனி இடையன் மடத்தின் மடாதிபதி 'ஸ்ரீலஸ்ரீ சிவநாராயண தேசிகர் எனும் நாச்சிமுத்து பழநிச்சாமிகள் ' இராமாயணச்சாவடியில் தங்கியிருந்தார். இடைச்சமூக பெரியவர்கள் சிலர் பழநிச்சாமிகளை கிருஷ்ணர் சிலையை இடமாற்றம் செய்ய வேண்டி உதவி கேட்டு அழைத்து விடுத்தனர். அதனை ஏற்று நாச்சிமுத்து பழனிச்சாமிகள் சிறிய கோயிலுக்குள் இருந்த  கம்பத்தடி கிருஷ்ணன் சிலையைத் தொட்டவுடன் சிலை அசையத் தொடங்கிது. அப்பொழுது நாச்சிமுத்து பழநிச்சாமிகள்  "கண்ணா! உனக்கு இந்த ஆண்டி தான் கிடைத்தானா?" என்று கூறி சிலையைத்தூக்கி புதிதாகக் கட்டப்பட்ட பெரிய திருக்கோயில் உள்ளே (வடக்கு பார்த்த திருமுகமண்டலமாக) பிரதிஷ்டை செய்தாராம்.
பின்னர் "கண்ணன் என்னை அழைக்கிறான்" என்று சொல்லி இராமாயணச்சாவடி தெற்கு பாகத்தில்,
 பின்புறம் (கிழக்கு வாசல் வழியே நுழையும் பகுதி)
வடக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து யோகநிலையில் ஜீவ சமாதி நிலையை அடைந்து ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமியின் திருவடி அடைந்து விட்டார்.
(• அதற்கான வழிபாட்டு அடையாளம் இன்றும் சாவடிக்குள் உள்ளது.) நாச்சிமுத்து சாமிகள் ஜீவசமாதி அடைந்தது 1909ம் வருடம் சித்திரை மாதம் ஏகாதசி திதி    உத்திரம் நட்சத்திரம் ஆகும். 
வைகை ஆற்றின் தென்கரையில் மங்களாபுரம் ஜமீன் பகுதியில் உள்ள பகுதியில் 'ஆலவாய் சுந்தரேஸ்வரர் புட்டுக்கு மண் சுமந்த லீலை' நடத்தியதாக நம்பப்படும் புட்டுத்தோப்பு பகுதியில் இடையர்களுக்குச் சொந்தமான  இடத்தில் நாச்சிமுத்து சாமிகள் பூத உடலை புதைத்து சமாதி கட்டினர். சமாதியில் சிவலிங்கம் நாட்டி இருபுறமும் கணேசர்,சுப்பிரமணியர் ஆகியோரை ஸ்தாபிதம் செய்தனர்.  'புட்டுத்தோப்பு பழநிச்சாமிகள் மடம்' இராமாயணச் சாவடி இடையர்களின் உறவின் முறை அமைப்புக்குச் சொந்தமானது ஆகும்.
[ REFERENCE FROM:-
•  YADAV MOVEMENT IN TAMILNADU - D. NAGAENDHIRAN _ (note: This article cantain yadav moment in tamilnadu on are before 2001)
....Only by the end of the Nineteenth Century the Yadava Movement came into existence. Their main intention was to construct temples and choultries by their collective contribution and by their willing labour. In that way is Sri. Nadimuthu Samiar (called as Palani Samiar constructed Idayan Madam at Palani the Pilgrimage Centre of Tamilnadu). He is the son of Shri Chellakumaru Kone of Palaghat of Kerala. He trvelled by bullock cart from Palghat to Palani. En-route he collected Yadavas (at that time called as Idayans) at each village and formed Yadava Sabas to help him in constructing Idayan Madam at Palani. By that way he collected many and constructed big choultry called as Idayan Madam at Palani. It was at the end of Nineteenth century. Then he was called as Yadava Madathipathy (the Lead Priest of Yadavas).
After the construction of Idayan Madam was over he proceeded to Madurai and he stayed at Ramayana Chavadi in North Masi Street, Madurai and performing as Lead Priest of Yadavas at Madurai. There was an old Sree Krishna Temple at North Masi Street, Madurai and it was in a dilapidated stage. He collected Yadavas of North Masi Street Madurai who at that time called themselves as Thousand House Yadavas and induced them to contribute money for the reconstruction of Sree KrishnaTemple and they also contributed money for that purpose and construction work was started.
The Moola Vigraha of Sree Krishna was removed from the old temple and installed in the new temple by Sri. Nachimuthu Samiar and on that day itself he attained Samadhi. His mortal remains were laid to rest at Puttuthoppu in Madurai and a temple was erected in that place to remember him. That place is called as Palani Samiar Madam. This is being used by Yadavas for performing the last day ceremony of the deceased in their families. As per the available records Shri Nachimuth Samiar called as Palani Samiar was the pioneer of Yadavas Movement in the Southern part of Tamilnadu during the later part of Nineteenth Century.

ஸ்ரீஜயந்தி இரண்டாம் நாள்  உத்ஸவம் உறியடி உத்ஸவத்தின் மற்றொரு நிகழ்வான புகழ்பெற்ற 'வழுக்கு மரம் ஏறுதல்'  இன்றும் நடைபெறுகிறது. பழைய மரத்திற்கு பதிலாக இன்றுள்ள வழுக்கு மரத்தை செய்துள்ளனர்.

 "மரக்கடை வியாபாரி  இ.தெய்வேந்திரக்கோனார் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி ஆவணி மாதம் 7ந்தேதி மதுரை நவநீத கிருஷ்ணன் கோயிலுக்கு உபயம்"

 என்று வழுக்கு மரத்தில் உள்ள செப்பேட்டில் உள்ளது. தெய்வேந்திரக்கோனார் திருக்கோயிலின் ட்ரஸ்டியாகவும் இருந்தவர் ஆவார்.
தகவல் ஆதாரம்:-
(மதுரை
 நவநீதகிருஷ்ணன் கோயில் -
பட்டி. கே. பாலகுரு - கட்டுரை -கையெழுத்துப்பிரதி)

நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கட்டட வளர்ச்சிக்காக 'ஆயிரம் வீட்டு யாதவர் உறவின் முறை மகமை ட்ரஸ்ட் உருவாக்கினர். ஆடு,மாடு வாங்கி விற்பவர்களிடமும், திருமண வீடுகளிலும் மகமைப் பணம் வசூலிக்கப்பட்டது.  மதுரையைச் சுற்றியுள்ள 56 கிராமங்களில் வசித்து வரும் புதுநாட்டு இடையர்களிடம், மகமைப்பணம் வசூலிக்க 18 பட்டிக்காரர்கள் இருந்தனர்.


இந்த உறவின் முறை மகமை கட்டளையானது
நாட்டாமைக்காரர், பட்டிக்காரர்,
சின்னகணக்கு,
பெரிய கணக்கு, தண்டல்காரர், மேனேஜர், கணக்குப்பிள்ளை, ஆகியோர்களைக் கொண்ட நிர்வாக அமைப்பில் இயங்கியது. 56 கிராமங்களில் வசூலித்த
அந்த மகமைப்பணம் கொண்டு 'விரோதி வருடம், ஆனி மாதம் 24ம் தேதி' 07-07-1949ல் புதிய பொலிவுடன் இராமாயணச் சாவடி, புதிய இராஜகோபுரத்துடன் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடத்தினர். அப்போதே  ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கர்ப்பகிரகத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு இருபுறமாக ருக்மிணி -சத்தியபாமா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்