Monday, October 1, 2018

இராமாயணச் சாவடி இடையர்கள் (பகுதி - 5 )


இவ்வாறு இடையர்கள் மதுரையில் குடியேறியபின்பு ஒருமுறை திருமலைமன்னர் வீதியுலாவாக பிற்காலங்களில் இராமாயணச்
சாவடியாக அறியப்பட்ட 'இராவான சாவடி' வழியாக (இரவு கள்ளர் திசைக்காவல் சாவடி)
 வந்தபோது களைப்பு  ஏற்பட்டதால் சாவடிக்குள் சற்று ஓய்வெடுத்தார். சாவடியருகே
தயிர் மற்றும் நீர்மோர் விற்கும் இடைச்சியான 'தோட்டக்கார மீனாட்சி' எனும் கிழவி தந்த நீர் மோரில் தாகசாந்தி பெற்ற திருமலை மன்னர் கிழவியிடம் 'அம்மா! உனக்கு என்ன வேண்டும் கேள்?,தருகிறேன்!' என்று கேட்டாராம். அந்த கிழவியும் இராவான சாவடியை பரிசாக கேட்டாளாம். மேலும் சித்திரைத்திருவிழாவில் 5ம் திருநாள்  அன்று இந்த இடையர் தெரு சாவடியில் தங்கி இடையர்களை அருள்பாலித்து விட்டுச் செல்ல மன்னரை  வேண்டினாளாம். மன்னரும் அதற்கான கட்டளையை இட்டு, சித்திரை 5ம் நாள் திருவிழாவிற்கான செலவை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசர் தேவஸ்தானமே ஏற்கவேண்டும் என தாமிர சாசனத்தை எழுதி தோட்டக்கார மீனாட்சியிடம் தந்தாராம். (குறிப்பு:- 2012 ம் ஆண்டு வரை  பணம் கட்டாமலேயே இராமாயணச் சாவடி இடையர்கள்  நடத்தினர்.)


மேற்க்கண்ட தோட்டக்கார கிழவி கதைக்கான ஆதாரம்
REFERENCE. FROM:-
'The Hindu' News Paper Article by S.S.Kavitha
(History meets religion)
Dated: MAY 05, 2007

........One such structure is the Ramayana Chavadi on North Masi Street. Tucked between the age-old Krishna Temple and Chellathamman Temple, Ramayana Chavadi like several other structures in the city, has an interesting history to narrate. One of the oldest resident of North Masi Street, P. Varadarasan, says that though the exact origin of Ramayana Chavadi is not known, it is believed that
'Thottakari Meenakshi' donated it for the benefit of her community Thousand House Yadavas (Aayiram Veetu Yadavavarkal).
Thottakari Meenakshi, an old lady who distributed curd and buttermilk took possession of the properties. When King Thirumalai Naicker enquired about her desires she said she wanted Goddess Meenakshi to stay in the Chavadi for a day during the Chithirai Festival."This is the one of the two places where Goddess Meenakshi stays for an entire day. It falls on the fifth day of the 12-day Chithirai festival. The other place is Villapuram Pavarkai Mandagapadi," says Mr. Varadarasan. But there is a difference. At Villapuram Pavarkai Mandagapadi deposit has to be paid whereas for Ramayana Chavadi there is no such requirement.
The Chavadi has an inscription and a pattayam that was handed over by King Thirumalai Naicker. It has the sanction for Goddess Meenakshi's stay. The Chavadi has another unique history.

மதுரை வீதிகளை காவல்காக்கும் காவலர்கள்(பிறமலைக்கள்ளர்கள்) இரவு இராமாயணச்சாவடியில் வந்து தங்குவதைப்பற்றி சாகித்ய அகாதமி விருது பெற்ற 'காவல்கோட்டம்' எனும் நாவலில் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
திருமலைநாயக்கரால் இடையர்களுக்கு தரப்பட்ட 'இராவான சாவடி'யானது சிறிய வடிவில் இருந்து கல் மண்டபமாக 02-09-1881ல் மறுகட்டுமானத்தில் மாறியது.
 இராமாயண கதாகாலட்சேபம் இங்கு அதிக முறை நடந்ததால் இதனை இராமாயணச்சாவடி என்று பரவலாக அழைக்கத் தொடங்கியதன் விளைவாக (தருமத்துப்பட்டி செப்பேட்டில் உள்ளபடி)
திசைக்காவலர்கள் தங்கும் இராவான (Night) சாவடி காலப்போக்கில் மதுரை சுற்று வட்டார மக்கள் மனதில் 'இராமாயணச் சாவடி' என்றே பதிய ஆரம்பித்தது. இந்த இராமயணச்சாவடியில் அக்காலத்தில் எல்லோருக்கும் கல்வியறிவில்லாததால் இராமாயணக் கதைகளை ஒருவர் வாசிக்க மற்ற எல்லோரும் கேட்பார்களாம். ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தன்று மதுரையில் கனமழை பெய்யும் என்று 15.08.2012 களஆய்வின் போது தெய்வத்திரு. வே.நா.திருமால் சோலைமணி தாத்தா கூறியது இங்கு நினைவிற்கு வருகிறது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே சாவடிக்குள் இராமாயணம்,பாகவதம், என சாதி பேதமின்றி இடையர்,மறவர்,பிள்ளை,ஐயங்கார் என பலரும் படித்து வந்தனர்.  சங்கர மூர்த்திக்கோனார் என்பவர் ஸ்ரீமத் பாகவத அம்மானையினை கி.பி.1817ம் ஆண்டு நடந்த வைகுண்ட ஏகாதசியன்று இந்த இராமாயணச் சாவடியில் அரங்கேற்றினார் என்கிறார் பேராசிரியர் தொ.பரம சிவன்.  (ஆதாரம்: ஆய்வு நூல்- அழகர் கோயில்  -பக்கம் 171 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியீடு-முதற்பதிப்பு:1989) இந்த  சாவடியில் மின் விளக்கு கண்டுபிடிக்காத காலத்தில் தீப்பந்தங்களை வைத்துக் கொண்டு இராமாயணம் படிப்பார்களாம். அழகர் பற்றிய பாடல்களை  இராகத்தோடு இசைப்பார்களாம்.


இதிகாச, புராண கதாகாலட்சேபம் நடத்தும் இடமாக ஆன்மீகச் சான்றோர்களும், ஆங்கிலேயர்களை எதிர்க்கும் அரசியல் தலைவர்களுக்கு ரகசிய களமாகவும் இராமாயணச்சாவடி  19,20 ம் நூற்றாண்டுகளில்  பயன்படுத்தப்பட்டது.
சாவடியின் உள்ளே சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இராமபிரான், திருமலை விநாயகர், தண்டாயுதபாணி ஆகிய கடவுள்களின் வழிபாட்டு சிலைகளும் உள்ளன. 
சிவநாராயண தேசிகர் (எ) நாச்சிமுத்து பழனிச்சாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், கற்றங்குடி ரெட்டி சுவாமிகள் மூக்கையா சுவாமிகள் போன்ற மகான்கள் தங்கிய, உலாவிய பகுதி இதுவாகும்.






சுமார் கி.பி.16-17ம் நூற்றாண்டுகளில் சிறிய அளவிலாக காட்சியளிக்கப்பட்ட கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் 1909ம் ஆண்டில் பெரியகோயிலாக கட்டும் முயற்சி நடந்தது. (இன்றைய கோயிலின் கிழக்குவாசலில் ஒரு சிறிய கோயிலில் கிழக்குத் திருமுக மண்டலமாக "கம்பத்தடி கிருஷ்ணன்" இருந்தார். கம்பத்தடி தற்போதைய கோயிலின் வடக்கு வாசல் பகுதியில்  உள்ளது. ) 1909ல் கட்டப்பட்ட பெரிய கோயிலுக்குள் கம்பத்தடி கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்ய இந்த இடைச்சமூக பெரியோர்கள் 'எட்டு பேர்கள்' முயற்சி செய்தனர்.
சிலையை அசைக்கக் கூட முடியவில்லை. கடப்பாரை கம்பிகளும் கூட வளைந்தனவாம். அப்போது பழனி இடையன் மடத்தின் மடாதிபதி 'ஸ்ரீலஸ்ரீ சிவநாராயண தேசிகர் எனும் நாச்சிமுத்து பழநிச்சாமிகள் ' இராமாயணச்சாவடியில் தங்கியிருந்தார். இடைச்சமூக பெரியவர்கள் சிலர் பழநிச்சாமிகளை கிருஷ்ணர் சிலையை இடமாற்றம் செய்ய வேண்டி உதவி கேட்டு அழைத்து விடுத்தனர். அதனை ஏற்று நாச்சிமுத்து பழனிச்சாமிகள் சிறிய கோயிலுக்குள் இருந்த  கம்பத்தடி கிருஷ்ணன் சிலையைத் தொட்டவுடன் சிலை அசையத் தொடங்கிது. அப்பொழுது நாச்சிமுத்து பழநிச்சாமிகள்  "கண்ணா! உனக்கு இந்த ஆண்டி தான் கிடைத்தானா?" என்று கூறி சிலையைத்தூக்கி புதிதாகக் கட்டப்பட்ட பெரிய திருக்கோயில் உள்ளே (வடக்கு பார்த்த திருமுகமண்டலமாக) பிரதிஷ்டை செய்தாராம்.
பின்னர் "கண்ணன் என்னை அழைக்கிறான்" என்று சொல்லி இராமாயணச்சாவடி தெற்கு பாகத்தில்,
 பின்புறம் (கிழக்கு வாசல் வழியே நுழையும் பகுதி)
வடக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து யோகநிலையில் ஜீவ சமாதி நிலையை அடைந்து ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமியின் திருவடி அடைந்து விட்டார்.
(• அதற்கான வழிபாட்டு அடையாளம் இன்றும் சாவடிக்குள் உள்ளது.) நாச்சிமுத்து சாமிகள் ஜீவசமாதி அடைந்தது 1909ம் வருடம் சித்திரை மாதம் ஏகாதசி திதி    உத்திரம் நட்சத்திரம் ஆகும். 
வைகை ஆற்றின் தென்கரையில் மங்களாபுரம் ஜமீன் பகுதியில் உள்ள பகுதியில் 'ஆலவாய் சுந்தரேஸ்வரர் புட்டுக்கு மண் சுமந்த லீலை' நடத்தியதாக நம்பப்படும் புட்டுத்தோப்பு பகுதியில் இடையர்களுக்குச் சொந்தமான  இடத்தில் நாச்சிமுத்து சாமிகள் பூத உடலை புதைத்து சமாதி கட்டினர். சமாதியில் சிவலிங்கம் நாட்டி இருபுறமும் கணேசர்,சுப்பிரமணியர் ஆகியோரை ஸ்தாபிதம் செய்தனர்.  'புட்டுத்தோப்பு பழநிச்சாமிகள் மடம்' இராமாயணச் சாவடி இடையர்களின் உறவின் முறை அமைப்புக்குச் சொந்தமானது ஆகும்.
[ REFERENCE FROM:-
•  YADAV MOVEMENT IN TAMILNADU - D. NAGAENDHIRAN _ (note: This article cantain yadav moment in tamilnadu on are before 2001)
....Only by the end of the Nineteenth Century the Yadava Movement came into existence. Their main intention was to construct temples and choultries by their collective contribution and by their willing labour. In that way is Sri. Nadimuthu Samiar (called as Palani Samiar constructed Idayan Madam at Palani the Pilgrimage Centre of Tamilnadu). He is the son of Shri Chellakumaru Kone of Palaghat of Kerala. He trvelled by bullock cart from Palghat to Palani. En-route he collected Yadavas (at that time called as Idayans) at each village and formed Yadava Sabas to help him in constructing Idayan Madam at Palani. By that way he collected many and constructed big choultry called as Idayan Madam at Palani. It was at the end of Nineteenth century. Then he was called as Yadava Madathipathy (the Lead Priest of Yadavas).
After the construction of Idayan Madam was over he proceeded to Madurai and he stayed at Ramayana Chavadi in North Masi Street, Madurai and performing as Lead Priest of Yadavas at Madurai. There was an old Sree Krishna Temple at North Masi Street, Madurai and it was in a dilapidated stage. He collected Yadavas of North Masi Street Madurai who at that time called themselves as Thousand House Yadavas and induced them to contribute money for the reconstruction of Sree KrishnaTemple and they also contributed money for that purpose and construction work was started.
The Moola Vigraha of Sree Krishna was removed from the old temple and installed in the new temple by Sri. Nachimuthu Samiar and on that day itself he attained Samadhi. His mortal remains were laid to rest at Puttuthoppu in Madurai and a temple was erected in that place to remember him. That place is called as Palani Samiar Madam. This is being used by Yadavas for performing the last day ceremony of the deceased in their families. As per the available records Shri Nachimuth Samiar called as Palani Samiar was the pioneer of Yadavas Movement in the Southern part of Tamilnadu during the later part of Nineteenth Century.

ஸ்ரீஜயந்தி இரண்டாம் நாள்  உத்ஸவம் உறியடி உத்ஸவத்தின் மற்றொரு நிகழ்வான புகழ்பெற்ற 'வழுக்கு மரம் ஏறுதல்'  இன்றும் நடைபெறுகிறது. பழைய மரத்திற்கு பதிலாக இன்றுள்ள வழுக்கு மரத்தை செய்துள்ளனர்.

 "மரக்கடை வியாபாரி  இ.தெய்வேந்திரக்கோனார் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி ஆவணி மாதம் 7ந்தேதி மதுரை நவநீத கிருஷ்ணன் கோயிலுக்கு உபயம்"

 என்று வழுக்கு மரத்தில் உள்ள செப்பேட்டில் உள்ளது. தெய்வேந்திரக்கோனார் திருக்கோயிலின் ட்ரஸ்டியாகவும் இருந்தவர் ஆவார்.
தகவல் ஆதாரம்:-
(மதுரை
 நவநீதகிருஷ்ணன் கோயில் -
பட்டி. கே. பாலகுரு - கட்டுரை -கையெழுத்துப்பிரதி)

நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கட்டட வளர்ச்சிக்காக 'ஆயிரம் வீட்டு யாதவர் உறவின் முறை மகமை ட்ரஸ்ட் உருவாக்கினர். ஆடு,மாடு வாங்கி விற்பவர்களிடமும், திருமண வீடுகளிலும் மகமைப் பணம் வசூலிக்கப்பட்டது.  மதுரையைச் சுற்றியுள்ள 56 கிராமங்களில் வசித்து வரும் புதுநாட்டு இடையர்களிடம், மகமைப்பணம் வசூலிக்க 18 பட்டிக்காரர்கள் இருந்தனர்.


இந்த உறவின் முறை மகமை கட்டளையானது
நாட்டாமைக்காரர், பட்டிக்காரர்,
சின்னகணக்கு,
பெரிய கணக்கு, தண்டல்காரர், மேனேஜர், கணக்குப்பிள்ளை, ஆகியோர்களைக் கொண்ட நிர்வாக அமைப்பில் இயங்கியது. 56 கிராமங்களில் வசூலித்த
அந்த மகமைப்பணம் கொண்டு 'விரோதி வருடம், ஆனி மாதம் 24ம் தேதி' 07-07-1949ல் புதிய பொலிவுடன் இராமாயணச் சாவடி, புதிய இராஜகோபுரத்துடன் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடத்தினர். அப்போதே  ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கர்ப்பகிரகத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு இருபுறமாக ருக்மிணி -சத்தியபாமா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment