கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை மன்னரை
மைசூர் மன்னன் கட்டளைப்படி, மதுரை நாட்டிற்கு 'கம்பையா' என்ற மிகக் கொடியவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று படையெடுத்து வந்தான். மதுரை நகருக்குள் புகுந்து ஆண், பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் பட்டத்து ராணி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து, கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார்கள்.
அதே நேரத்தில் தன்னரசு படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். 'திருமலை பின்னத்தேவர்' தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது மைசூர் அரச தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் எட்டு நாட்டுக் கள்ளர் திருமலை பின்னத்தேவருக்கு 'மூக்குப்பறி' மற்றும் 'பெத்தபிள்ளை' என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி'என்ற பட்டமும் 'ராணி சொல் காத்தான்' என்ற பெயரும் வழங்கினார்.
சரி! யாரிந்த திருமலை பின்னத்தேவன் என்பதை அறிவோம்!
மதுரை நகர் நிரந்தரமான பாதுகாப்பிலிருக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு மதுரைக்கோட்டையை அகழிகளுடன் திருமலை மன்னர் பலப்படுத்தினார். அதற்கென எடுத்த விழாவில் எனக்கோ அல்லது நகரத்திற்கோ எவராலும் முக்கியமாக பிரமலைக்கள்ளர்களாலும் அச்சம் விளைவிக்க முடியாது என்றும் கள்ளர்கள் அடங்கிவிட்டார்கள் என்றும் திருமலை நாயக்க மன்னர் பேசினார். இதையறிந்த திருப்பரங்குன்றத்துத் திசைக்காவலனாகவும், மற்றும் ஸ்ரீகந்தர் ஸ்வாமி தேவஸ்தானத்துக்குப் பரம்பரை பாதுகாவலனாகவும் இருந்து வந்த காரிபின்னைத்தேவனுக்கு அரசவிழாவில் மன்னர் கள்ளர்களை அடக்கிவிட்டேன் என்ற பிரசங்க சேதியை அறிந்து, 'மன்னரின் அடக்குமுறைக்குப் பயந்தோமில்லை. அகழியும் கோட்டையும் மதிலும் ஒரு பெரிய தடுப்பாக மாட்டாது. மக்கள் மனது வைத்து மன்னன் பாதுகாக்கப் படவேண்டும்' என்று சூளுரை செய்து மன்னருக்குப் புத்தி புகட்டத் திட்டமிட்டு வெற்றி கண்டார்.
[குறிப்பு:-திருமலை நாயக்கரால் திருப்பரங்குன்றம் கோயிலின் அறங்காவலர் உரிமை 'காரி பின்னத்தேவன்' என்பவருக்கு 'திருமலைக்காரி பின்னத்தேவன் என பட்டம்கட்டி அவருக்கே உரிமையும் செப்புப்பட்டயமும் தரப்பட்டுள்ளது. (காரி பின்னத்தேவன் மலையமான் திருமுடிக்காரியின் மரபினரே. இவர்களுக்கு மழவராயர் என்று பட்டம் இருந்துள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலில் பாண்டியனால் நியமிக்கப்பட்ட 'மழவராயர்' என்ற வம்சத்தினரே பிரமலைக்கள்ளர்.
திருப்பரங்குன்றத்தில் 13-ஆம் நூற்றாண்டு சுந்தரப்பாண்டியத்தேவன் கல்வெட்டுகளில் ஒருபாடிக்காப்போன் மழவராயர் என்பவரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த (பாடிக்காப்போனாக ) திசைக்காவல் 'மழவராயர்' பிரமலைக் கள்ளரே.]
கள்ளர்களின் உபாயங்களைக் கொண்டு திருமலைமன்னரின் சயனக்ருஹத்திற்குள் 'கன்னவாசல்' செய்து உள்ளே நுழைந்து மன்னரின் ராஜசின்னங்களைத் திருடிச் சென்றனர். காலையில் இதையறிந்த திருமலை மன்னர் திருட்டுச்சொத்தை எடுத்தவர்கள் நேரில் கொண்டு வந்து ஒப்புவித்தால் செய்த தவறை மன்னித்து செயல்வகைத்திறத்திற்குப் பரிசாகச் சன்மானங்களும் உயர்தர உத்தியோகமும் வழங்கப்படும், தாமே கண்டுபிடித்தால் குற்றவாளியாக பாவித்து தண்டனை விதிக்கப்படும் என்றும் முரசு கொட்டி ஊர்முழுக்க பிரகடனம் செய்யப்பட்டது. அதிகாலை எட்டுநாட்டுக் கள்ளர் தலைவரும்,தம் உறவினருமான ஊராண்ட உரப்பனூர் பின்னைத்தேவரிடம், திருப்பரங்குன்றம் காரி பின்னைத்தேவர் தனது தந்திரிகளுடன் திருமலை மன்னரின் அரண்மனையில் திருடிய சொத்துக்களை ஒப்படைத்தனர்.
உடனே உரப்பனூர் பின்னைத்தேவர் ராஜசின்னங்களையும்,அதைத்திருடியவர்களையும்
திருமலைமன்னரிடம் ஒப்படைத்து அவரைச் சமாதானம் செய்து, திருடிய தந்திரிகளுக்கு போர்ப்படையில் பல பிரிவுகளில் நல்லதொரு பதவிகளை வாங்கித் தந்தார். உரப்பனூர் பின்னைத்தேவரின் உள்ளன்போடு அரசுக்கு நன்றி காட்டிய இச்செயலை மிகவும் பாராட்டி, அவருக்கு அரசியல் அரங்கில் உயர்ந்த பட்டமும்,பதவியும் வழங்கினார். திருமலை மன்னருக்கு 'திருமலை பின்னத்தேவர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மேலும் பிறமலை நாட்டின் சுயாதீனத் தலைவராக நியமனமும் ஆனார்.
(ஆதாரம்:- மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு
முதற்பதிப்பு 1976
இரண்டாம் பதிப்பு 1982
ஆசிரியர்:- பி.முத்துத்தேவர்
பக்: 210 to 220)
பிரமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர்.
பிரான்மலைப் பகுதியில் வாழ்ந்து வந்த கள்ளர்களில் ஒரு சிலர் அவ்வகுப்பாரிடமிருந்து பிரிந்து வந்து மதுரைக்கு மேற்குப்பகுதிகளில் குடியமர்ந்தனர். அவர்கள் பிரான்மலைக்கள்ளர்கள் எனப்பட்டனர். அச்சொல்லே மருவி பிரமலை எனப்பட்டது என்ற ஒரு கருத்தும் உள்ளது.
[ஆதாரம்:- பிறமலைக்கள்ளர்கள் வாழ்வும்,லரலாறும் இரண்டாம்பதிப்பு 2012 ஆசிரியர்:- இரா.சுந்தரவந்தியத்தேவன்]
திருப்பரங்குன்ற மலை கிழக்கு எல்லையாகவும், ரத்தினகிரிமலை (கணவாய்மலை) மேற்கு எல்லையாகவும், குண்டாறு தெற்கு எல்லையாகவும் நாகமலை வடக்கு எல்லையாகவும் கொண்டு அமைந்துள்ள பகுதியே 'புறமலை அல்லது பிரமலை நாடு' என முத்துத்தேவர் குறிப்பிடுகிறார்.
இப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட கள்ளர்களே 'பிறமலைக்கள்ளர்' என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இப்பகுதியைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மதுரை நகரத்திலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவிவாழ்கின்றனர். இவர்களுடைய குலப்பட்டம் - "தேவர்".
பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர்,பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.
திருமலை பின்னத்தேவர் எட்டுநாட்டின் முதல் தலைவராவார் (எட்டு நாடு 24 உபகிராமம், 64 பரப்பு நாடு, 128 சிதறல் நாடு), அவர் வாழ்ந்த 'ஊராண்ட உரப்பனூர்' கிராமம் எட்டுநாட்டின் தலைமை இடமாகக் கருதப்பட்டது.
உரப்பனூர், பிரமலைக்கள்ளர் நாட்டின் தலைமைக்கிராமமாகக் கருதப்படுகின்றது. ஓர் அப்பன் ஊர் என்ற சொல்லே உரப்பனூர் என்று மருவியது என்கின்றனர். இது கீழ்உரப்பனூர், மேல்உரப்பனூர், ஊராண்டஉரப்பனூர் என மூன்று கிராமங்களாக உள்ளது. இவை இன்றைய திருமங்கலம் ஒன்றியத்தில் அமைந்திருக்கின்றன.
(பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் வேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.)
கி.பி 1655 இல் உரப்பனூரைச் சேர்ந்த திருமலை பின்னத்தேவன் என்பவரைப் இப்பகுதியின் தலைவராகப் பட்டங்கட்டி திருமலைநாயக்கர் ஒரு பட்டயத்தை வழங்குகின்றார். அப்பட்டயத்திலேயே நாடு எட்டு என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு எட்டிற்கும் கம்பளிவிரித்து நீதிபரிபாலனம் செய்கின்ற அதிகாரம் திருமலை பின்னத்தேவருக்கு அளிக்கப்படுகின்றது.
நாயக்க அரசு, குமரி முனையிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான தமிழரின் நிலப்பரப்பை கைப்பற்றி ஆண்ட ஓர் அரசு, எழுபத்திரண்டு பாளையங்களை உருவாக்கி வரி வசூல் செய்து ஆட்சி நடத்திய ஓர் அரசு, தன் அரண்மனைக்கு சில மைல் தொலைவில் இருந்த கள்ளர் நாட்டிலிருந்து எந்த வரியும் வசூல் செய்ய முடியவில்லை.
கிபி 1654 ல் கள்ளர்களை ஒடுக்க பல முயற்சி செய்த திருமலை மன்னர், கள்ளர் நாடுகளை அடக்கி ஒரு பாளையம் அமைக்கமுடியால் திணறியபோது ஒரு சமரசத்திட்டத்திற்கு வந்தான். எட்டு நாட்டிலும் கம்பளி விரித்து அதிகாரம் பண்ன உரிமை கொடுத்து உரப்பனூர் பின்னத்தேவருக்கு பட்டம் கட்டி, மேலும் பின்னத்தேவன், சுந்ததேவனை அழைத்து பல பட்டங்கள் பல பரிசுகள் கொடுத்து கள்ளர் நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டான்.
(ஆதாரம்:-தருமத்துப்பட்டி செப்பேடு - கி.பி.1655)
எட்டு நாட்டின் தலைவராகப் பட்டம் சூட்டப்பட்ட பின்னத்தேவருக்கு கம்பளி, பிடிசெம்பு, பிரம்பு, பாதகட்டை, காளாஞ்சி செம்பு போன்றவை அரசுசின்னங்களாக வழங்கப்பட்டன. அவர் நாட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொழுதும் தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துக்களுக்குத் தலைமை தாங்கும் பொழுதும் அரசரால் கொடுக்கப்பட்ட அந்த இராச அரசுகம்பளத்தினை விரித்தே அதன்மீது அமர்வார். அரசர் கொடுத்த பாதக்கட்டையை அணிந்து கொண்டும், பொற்பிரம்பினைக் கையில் பிடித்துக் கொண்டும்தான், கூட்டங்களை நடத்துவார். இனி அவரின் அதிகாரங்கள் பற்றிக்காண்போம்.
ஒருவரைச் சாதியிலிருந்து நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் அதிகாரமுடையவராக இருந்தார். ஓர் ஆண் வேறு சமூகத்துப் பெண்ணையோ, பெண் வேறு சாதி ஆணையோ திருமணம் செய்து கொண்டால் அவர்களையும் திருமண உறவுகள் தடை செய்யப்பட்டுள்ள (அதாவது பங்காளி உறவுடையவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களையும்) தனது அதிகாரத்திற்கும் தனக்குத் துணையாக இருக்கும் தேவர் அவை(சபை)யின் அதிகாரத்திற்கும் தனக்கும் மறுப்பவர்களையும் சாதி நீக்கம் செய்கின்ற அதிகாரம் திருமலை பின்னத்தேவருக்கு இருந்தது. அவ்வாறு “ஒருவரைச் சாதியிலிருந்து நீக்கிவிட்டேன். இவனோடு இனிச் சுத்தக் கள்ளன் யாரும் கொள்வினை, கொடுப்பினை வைத்துக் கொள்ளக்கூடாது” எனச் சொல்லி வலப்புறமும், இடப்புறமும் திரும்பி மூன்று முறை தனது எச்சிலைத் துப்பிவிடுவார். அன்றிலிருந்து அவர் சாதியிலிருந்து விலக்கப்பட்டவராக கருதப்படுவர். யாராவது மீறி அவர்களோடு திருமணம் உறவு வைத்துக்கொண்டால் அவர்களும் விலக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவர். அவர்கள் ஒதுக்கல் வகை எனப்பட்டனர். அவர்கள் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை வைத்துக்கொண்டனர். அதனால் இதற்குள்ளேயே அவர்கள் தனிக்குழுவாக உருவெடுத்தனர்.
இவ்வாறு விலக்கி வைப்பதோடு விலக்கப்பட்ட ஒருவரை சாதியில் சேர்த்துக் கொள்கின்ற அதிகாரமும், பின்னத்தேவருக்கு இருந்தது. சாதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தனது தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, தேவர் அவையைச் சேர்ந்தவர்களின் காலில் விழுந்து வணங்கி அதற்குரிய தண்டத்தொகையைத் தேவர் அவைக்குச் செலுத்தி விட்டால் அவரைச் சாதியில் மீளவும் சேர்த்துக் கொள்ள இயலும். அப்படிச் சேர்க்கும் பொழுது திருமலை பின்னத்தேவர் இன்று முதல் இவன் சாதிமகன் சுத்தக் கள்ளன் எனச் சொல்லித் தனது பிடி செம்பிலுள்ள தண்ணீரை எடுத்து அவரது தலையில் மூன்று முறை தெளித்துவிட்டால் அவர் அன்றிலிருந்து சாதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுவார். அவர் பின்பு சுத்தக் கள்ளர்களுடன் திருமண உறவுகளை வைத்துக் கொள்வர். அப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வழக்கைத் தொடுக்கின்ற வாதிகள் அவருக்கு ஐந்து பணம் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். இச்சாதிக்குள் அவரது தீர்ப்பே இறுதியானதாக கருதப்பட்டது. அதன் மீது மேல்முறையீடு மதுரையிலுள்ள கோனார்கள் சாவடிக்கும், அதிலிருந்து மேல்முறையீடு கீழ்நாடு நரசிங்கம் பட்டியிலுள்ள சாவடிக்கும் எடுத்துச் செல்லப்படும். இறுதி மேல்முறையீடு இராமநாதபுரம் அரசர் சேதுபதியிடம் எடுத்துச் செல்லப்படும்.
திருமலை நாயக்கரிடம் “பெத்தபிள்ளை“ என்றும் “திருமலை“ என்றும் பட்டம் பெற்ற பெத்தபிள்ளை திருமலைப்புன்னைத் தேவன் என்பவனுக்குக் கம்பிளி அதிகாரம், பாதகுறடு, காளாஞ்சி முதலிய சிறப்புகள் செய்து அவனுக்குக் கம்பிளி போடுகிறபோது பாதகாணிக்கையாக 5 பணம், அரண்மனையிலிருந்து பணமுடிப்பு 60 பணம் ஆகியவை கிடைப்பதற்கும், அவனுக்குப் பெண் குழந்தை பிறந்த போது “திருமலைபுன்னியக்கா“ என்று பெயர் வைத்துத் தங்கப்பதக்கம் வழங்குவதற்கும் மேலும் 'உச்சப்பட்டி, தருமத்துப்பட்டி'ஆகிய இரண்டு கிராமங்கள் அவனுக்கு விட்டுக் கொடுத்ததற்கும்
| 'பதினெட்டுப் பட்டிக் கோனார்கள்' |
அவனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளுக்கும் ஆதாரமாக அளிக்கப்பட்ட செப்புப் பட்டயம் இது. இதில் சிவகங்கை மன்னர், புதுக்கோட்டை மன்னர் இருவரும் குறிப்பிடப்படுகின்றனர். மதுரையில் வடக்கு மாசி வீதியில் இன்றுள்ள இடையர்களுக்கான ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் இன்னும் திருமலை பின்னைத்தேவன் வழியினருக்கு மரியாதைகள் இருப்பதாகத் தெரிகிறது.
• ஆதாரம்:- திருமலை மன்னரால் தரப்பட்ட
தருமத்துப்பட்டி செப்பேடு 2
• செய வருடம் பங்குனி மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை ( 19-03-1655)
• செப்பேட்டில் உள்ளவை:-
||"மதுராபுரிக்கி கற்த்தறாகிய திருமலை னாயக்கறவற்களுக்கு பெத்த பிள்ளை திருமலைப்புன்னைந்தேவனுக்கு எழுதிக் குடுத்த பட்டயம் செயளு பங்குனி ... சோமவாறத்தில் நாடு யெட்டு வணிகத்துக்கும் கம்பிளி அதிகாரமும் புடிசெம்பும் பட்டமும் முதமையும் பாதகொறடு காளாஞ்சியும் ஆகா யிவளவும் திருமலைப் புன்னைதேவனுக்கு பட்டங்கட்டி ஸ்ரீ யானுக்கு வருமானம் சாதியாற் நாட்டில் வந்தது கம்பிளி போடுகிறபோது பாதக்கணிக்கை 5 வச்சு கண்டு கொள்கிறரது ரெண்டாவது சுந்தத்தேவன் மூணாவது ஒச்சாத்தேவன் திருமலை புன்னைத்தேவனுக்கு அரமனையிலிருந்து 60 பண முடிப்பு குடுத்தனுப்புகிரது ஷியானுக்கு பெண் குளந்தை பிரந்ததக்கு திருமலைப் புன்னியக்காளென்று பேறும் வச்சு தங்கப்பதைக்கமும் போட்டு வீரமடையான் செய்க்கி கிளக்கு கணக்கு மானிபத்துக்கு வடக்கு நாலுசெயி நிலம் நஞ்சை மானிபம் பாக்கு வெத்திலை சிலவுக்கு உச்சப்பட்டி தற்மத்துப்பட்டி ஆக ரெண்டுகிராமம் விட்டுக் குடுத்தது பதினெட்டுப் பட்டிக் கோ னாக்கள் ஆடி தீவாளி சங்கழுந்திக்கி கும்புக்(கு) கிடாய் க னாக்கமாற்கள் பால்க்குடம் நெய்க்குடம் கொண்டு வந்து கண்டு கொள்ளவும் யிந்தப்படிக்கி ராசமானிய ஒப்பம் சாட்சி சிவசங்குராச தொண்டைமான், புதுக்கோட்டை சிவதத்தம்பி, கறுமாத்தூற் கொண்டிரியதேவன் தாம்பூர ப்பட்டயஞ் செய்தவன் ஆசாரி யிந்தப் பட்டயத்தை பின்னோர்கள் அடி அளிவு செய்தால் பிராமணாளைக் கொன்றதோசத்திலுங் காறாங்கோவைக் கொன்ற தோசத்திலு அடைந்து போவாறாகவும் வேணும் சொக்கலிங்கம் மீனம்மாள் துணை முணுசாமிதுணை.||
(குறிப்பு:- சித்தாலை எனும் கிராமத்தின் அருகே உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் ஊராண்ட உரப்பனூரை பூர்வீகமாகக்கொண்ட வடமலை சுந்தத்தேவர் கூட்டத்தாரின் உடன் பங்காளிகளும் பங்காளி முறை உள்ளவர்களும்
இராஜதானி ஊராண்ட உரப்பனூர் இது வடமலை சுந்தத்தேவரின் பூர்வீக ஊர்ராகும் இவரது வாரிசுகள்
1)ஊராண்டஉரப்பனூர்,
2)கரடிக்கல்,
3)மாவிலிபட்டி,
4)வடபழஞ்சி,
5)தென்பழஞ்சி,
6)வெள்ளைப்பாறைப்பட்டி,
7)நடுவக்கோட்டை,
8)மீனாட்சிபட்டி
போன்ற ஊர்களில் வாழ்கின்றனர் இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர் மேலும் வடமலை சுந்தத்தேவர் எனும் பட்டத்திற்குரியவர்கள் மேலே கண்ட ஊர்களில் வாழும் வடமலை சுந்தத்தேவர் வாரிசுகளுக்கு மட்டுமே மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள இடையர்களுக்கு(கோனார்) பாத்தியபட்ட ஸ்ரீநவநீதகிருஷணன் கோயில் பட்டம் கட்டப்படுகின்றனர்.)
| 'பதினெட்டுப் பட்டிக் கோனார்கள்' |
அவனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளுக்கும் ஆதாரமாக அளிக்கப்பட்ட செப்புப் பட்டயம் இது. இதில் சிவகங்கை மன்னர், புதுக்கோட்டை மன்னர் இருவரும் குறிப்பிடப்படுகின்றனர். மதுரையில் வடக்கு மாசி வீதியில் இன்றுள்ள இடையர்களுக்கான ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் இன்னும் திருமலை பின்னைத்தேவன் வழியினருக்கு மரியாதைகள் இருப்பதாகத் தெரிகிறது.
• ஆதாரம்:- திருமலை மன்னரால் தரப்பட்ட
தருமத்துப்பட்டி செப்பேடு 2
• செய வருடம் பங்குனி மாதம் 21ம் தேதி திங்கட்கிழமை ( 19-03-1655)
• செப்பேட்டில் உள்ளவை:-
||"மதுராபுரிக்கி கற்த்தறாகிய திருமலை னாயக்கறவற்களுக்கு பெத்த பிள்ளை திருமலைப்புன்னைந்தேவனுக்கு எழுதிக் குடுத்த பட்டயம் செயளு பங்குனி ... சோமவாறத்தில் நாடு யெட்டு வணிகத்துக்கும் கம்பிளி அதிகாரமும் புடிசெம்பும் பட்டமும் முதமையும் பாதகொறடு காளாஞ்சியும் ஆகா யிவளவும் திருமலைப் புன்னைதேவனுக்கு பட்டங்கட்டி ஸ்ரீ யானுக்கு வருமானம் சாதியாற் நாட்டில் வந்தது கம்பிளி போடுகிறபோது பாதக்கணிக்கை 5 வச்சு கண்டு கொள்கிறரது ரெண்டாவது சுந்தத்தேவன் மூணாவது ஒச்சாத்தேவன் திருமலை புன்னைத்தேவனுக்கு அரமனையிலிருந்து 60 பண முடிப்பு குடுத்தனுப்புகிரது ஷியானுக்கு பெண் குளந்தை பிரந்ததக்கு திருமலைப் புன்னியக்காளென்று பேறும் வச்சு தங்கப்பதைக்கமும் போட்டு வீரமடையான் செய்க்கி கிளக்கு கணக்கு மானிபத்துக்கு வடக்கு நாலுசெயி நிலம் நஞ்சை மானிபம் பாக்கு வெத்திலை சிலவுக்கு உச்சப்பட்டி தற்மத்துப்பட்டி ஆக ரெண்டுகிராமம் விட்டுக் குடுத்தது பதினெட்டுப் பட்டிக் கோ னாக்கள் ஆடி தீவாளி சங்கழுந்திக்கி கும்புக்(கு) கிடாய் க னாக்கமாற்கள் பால்க்குடம் நெய்க்குடம் கொண்டு வந்து கண்டு கொள்ளவும் யிந்தப்படிக்கி ராசமானிய ஒப்பம் சாட்சி சிவசங்குராச தொண்டைமான், புதுக்கோட்டை சிவதத்தம்பி, கறுமாத்தூற் கொண்டிரியதேவன் தாம்பூர ப்பட்டயஞ் செய்தவன் ஆசாரி யிந்தப் பட்டயத்தை பின்னோர்கள் அடி அளிவு செய்தால் பிராமணாளைக் கொன்றதோசத்திலுங் காறாங்கோவைக் கொன்ற தோசத்திலு அடைந்து போவாறாகவும் வேணும் சொக்கலிங்கம் மீனம்மாள் துணை முணுசாமிதுணை.||
(குறிப்பு:- சித்தாலை எனும் கிராமத்தின் அருகே உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை குலக்கோயிலாக வணங்கும் ஊராண்ட உரப்பனூரை பூர்வீகமாகக்கொண்ட வடமலை சுந்தத்தேவர் கூட்டத்தாரின் உடன் பங்காளிகளும் பங்காளி முறை உள்ளவர்களும்
இராஜதானி ஊராண்ட உரப்பனூர் இது வடமலை சுந்தத்தேவரின் பூர்வீக ஊர்ராகும் இவரது வாரிசுகள்
1)ஊராண்டஉரப்பனூர்,
2)கரடிக்கல்,
3)மாவிலிபட்டி,
4)வடபழஞ்சி,
5)தென்பழஞ்சி,
6)வெள்ளைப்பாறைப்பட்டி,
7)நடுவக்கோட்டை,
8)மீனாட்சிபட்டி
போன்ற ஊர்களில் வாழ்கின்றனர் இவர்கள் சித்தாலையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர் மேலும் வடமலை சுந்தத்தேவர் எனும் பட்டத்திற்குரியவர்கள் மேலே கண்ட ஊர்களில் வாழும் வடமலை சுந்தத்தேவர் வாரிசுகளுக்கு மட்டுமே மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள இடையர்களுக்கு(கோனார்) பாத்தியபட்ட ஸ்ரீநவநீதகிருஷணன் கோயில் பட்டம் கட்டப்படுகின்றனர்.)
தெய்வேந்திர கோத்திரமாகிய திருமலை பின்னதேவனை சேர்ந்த ஆறு தாய் மகன்களும் திருமலை நாயக்கனை சந்திக்கும் போது கீழ்கண்டவற்றை அளித்துள்ளனர்.
ஆட்டுக்கிடாய், 5 கலம் அரிசி,பருப்பு,பசும்பால்,சீனிசக்கரை,
பாதகாணிக்கை பணம் 50 ஆகியவற்றுடன் சந்தித்து மன்னரை சந்தோஷப்படுத்தினார்கள். அதனைக் கண்டு சந்தோஷமடைந்த மன்னர் என்ன வேண்டும் என்று கேட்க,
'18பட்டி கோங்கிமார்கள்'
(கோனார்கள்) தெருவில் வீட்டுமனைகள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கவும் இராமாயணச்சாவடியில் கூடும் பொழுது கொம்புக்கிடாய்,குத்துக்கிடாய் கொடுக்க வேண்டுமென்றால் நிலங்களில் ஆட்டுக்கிடை கிடத்தப்போனால் வருமானத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென வேண்டினர். அதன்படி செய்ய திருமலை மன்னர் உத்தரவிட்டுத் தரப்பட்டதே தருமத்துப்பட்டி செப்பேடு ஆகும்.
|தருமத்துப்பட்டி செப்பேடு |
பார்த்திப வருடம் ஆனி மாதம் 19ம் தேதி
ஆட்டுக்கிடாய், 5 கலம் அரிசி,பருப்பு,பசும்பால்,சீனிசக்கரை,
பாதகாணிக்கை பணம் 50 ஆகியவற்றுடன் சந்தித்து மன்னரை சந்தோஷப்படுத்தினார்கள். அதனைக் கண்டு சந்தோஷமடைந்த மன்னர் என்ன வேண்டும் என்று கேட்க,
'18பட்டி கோங்கிமார்கள்'
(கோனார்கள்) தெருவில் வீட்டுமனைகள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கவும் இராமாயணச்சாவடியில் கூடும் பொழுது கொம்புக்கிடாய்,குத்துக்கிடாய் கொடுக்க வேண்டுமென்றால் நிலங்களில் ஆட்டுக்கிடை கிடத்தப்போனால் வருமானத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென வேண்டினர். அதன்படி செய்ய திருமலை மன்னர் உத்தரவிட்டுத் தரப்பட்டதே தருமத்துப்பட்டி செப்பேடு ஆகும்.
|தருமத்துப்பட்டி செப்பேடு |
பார்த்திப வருடம் ஆனி மாதம் 19ம் தேதி
(17-06-1645)
தமிழ்ச் சமூகத்தின் பூர்வீக வழிபாட்டுச் சமயமரபுகளான இயற்கை வழிபாடு. முன்னோர் வழிபாடு, தாய்த் தெய்வ வழிபாடு, சண்டையில் இறந்து போன வீரர்களை வழிபடுகின்ற நடுகல் வழிபாடு போன்றவையே இன்றும் பீறலைக்கள்ளர்களின் அடிப்படை வழிப்பாட்டு மரபுகளாக உள்ளன. இவர்களது தெய்வங்கள் அனைத்தும் மேற்கூறிய நான்கு நிலைகளிலேயே அமைந்திருக்கின்றன. அவற்றைப் பல தெய்வ வடிவங்களில் வைத்து வழிபடுகின்றனர். அவை பின்வரும் நான்குவகைகளில் அமைந்துள்ளன.
1. குலதெய்வங்கள்,
2. காவல்தெய்வங்கள்
3. ஊர்ப்பொதுத்தெய்வங்கள் (அம்மன்)
4. நடுகல்தெய்வங்கள்
ஒரே குல தெய்வங்களை வணங்குபவர்கள் ஒரே பங்காளிகளாகவும் கருதப்படுகின்றனர். இக்குல தெய்வங்களை வணங்குவதன்மூலம் தங்கள் குலம் பலகிப்பெருகுவதாக நம்புகின்றனர். பெரும்பாலும் முகம் தெரியாத முன்னோர்களும்,அவர்களால் நம்பப்பட்ட சக்திகளுமே குலதெய்வ வடிவங்களைப் பெறுகின்றன. அவ்வகையில் பிறமலைக்கள்ளர்கள் பலவகை ஆண் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் தங்கள் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
கழுவநாதன், பொன்னாங்கன், கடசாரிநல்லகுரும்பன், புன்னூர் அய்யனார், பூங்கொடி அய்யனார், ஊர்க்காளை அய்யனார்,கல்யாணக்கருப்பு, தென்கரைக்கருப்பு (முத்தையா) சோனைக்கருப்பு, பெத்தனசாமி, ஆதிசிவன், பெருமாள், மலைராமன்,கோட்டைக்கருப்பு, வாலகுருநாதன், குருநாதன், மாயன், வீரபுத்திரசாமி, பதினெட்டாம்படிக் கருப்பு போன்ற ஆன் தெய்வங்களையும் பேச்சியம்மன், ஓச்சாண்டம்மன், சுந்தரவள்ளியம்மன், காத்தாண்டம்மன் (காத்தாண்டீஸ்வரி), அங்காளம்மன் (அங்காளஈஸ்வரி),சின்னக்காஅம்மன், காமாட்சியம்மன், கண்ணாத்தாள், ஒய்யாண்டாள், நல்லதங்காள் போன்ற பெண்தெய்வங்களையும் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
ஒவ்வொரு குலதெய்வக் கோயிலும் ஒரு குறிப்பிட்ட வம்சாவளிக்குப் பாத்தியப்பட்டதாக உள்ளது. பெரும்பாலும் ஒரே ஆணின் மரபில் வந்த வம்சத்தவர்கள் அதனைக்குல தெய்வமாக வணங்குகின்றனர். சில குலதெய்வக்கோயில்களை ஒருவரின் ஆண்வாரிசுகளும், பெண்வாரிசுகளும் இணைந்தும் வணங்குகின்றனர். ஒவ்வொரு குல தெய்வக்கோயிலிலும் 21 பரிவார தெய்வங்களும் சிலகோயில்களில் 42 பரிவாரத் தெய்வங்களும் உள்ளன. ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரில் கோயில் அமைந்திருந்தாலும், எல்லாக் கோயிலின் கருவறையிலும் அய்யன் சாமியே இடம் பெற்றுள்ளது. அய்யன் சாமியே எல்லாத் தெய்வங்களுக்கும் மூலத்தெய்வமாகக் கருதப்படுகின்றது. அந்த அய்யன்சாமியின் வலது, இடதுபக்கங்களில் மற்றபரிவாரத் தெய்வங்கள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. [ஆதாரம்:- பிறமலைக்கள்ளர்கள் வாழ்வும்,லரலாறும் இரண்டாம்பதிப்பு 2012 ஆசிரியர்:- இரா.சுந்தரவந்தியத்தேவன்]
1. குலதெய்வங்கள்,
2. காவல்தெய்வங்கள்
3. ஊர்ப்பொதுத்தெய்வங்கள் (அம்மன்)
4. நடுகல்தெய்வங்கள்
ஒரே குல தெய்வங்களை வணங்குபவர்கள் ஒரே பங்காளிகளாகவும் கருதப்படுகின்றனர். இக்குல தெய்வங்களை வணங்குவதன்மூலம் தங்கள் குலம் பலகிப்பெருகுவதாக நம்புகின்றனர். பெரும்பாலும் முகம் தெரியாத முன்னோர்களும்,அவர்களால் நம்பப்பட்ட சக்திகளுமே குலதெய்வ வடிவங்களைப் பெறுகின்றன. அவ்வகையில் பிறமலைக்கள்ளர்கள் பலவகை ஆண் தெய்வங்களையும், பெண் தெய்வங்களையும் தங்கள் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
கழுவநாதன், பொன்னாங்கன், கடசாரிநல்லகுரும்பன், புன்னூர் அய்யனார், பூங்கொடி அய்யனார், ஊர்க்காளை அய்யனார்,கல்யாணக்கருப்பு, தென்கரைக்கருப்பு (முத்தையா) சோனைக்கருப்பு, பெத்தனசாமி, ஆதிசிவன், பெருமாள், மலைராமன்,கோட்டைக்கருப்பு, வாலகுருநாதன், குருநாதன், மாயன், வீரபுத்திரசாமி, பதினெட்டாம்படிக் கருப்பு போன்ற ஆன் தெய்வங்களையும் பேச்சியம்மன், ஓச்சாண்டம்மன், சுந்தரவள்ளியம்மன், காத்தாண்டம்மன் (காத்தாண்டீஸ்வரி), அங்காளம்மன் (அங்காளஈஸ்வரி),சின்னக்காஅம்மன், காமாட்சியம்மன், கண்ணாத்தாள், ஒய்யாண்டாள், நல்லதங்காள் போன்ற பெண்தெய்வங்களையும் குல தெய்வங்களாக வணங்குகின்றனர்.
ஒவ்வொரு குலதெய்வக் கோயிலும் ஒரு குறிப்பிட்ட வம்சாவளிக்குப் பாத்தியப்பட்டதாக உள்ளது. பெரும்பாலும் ஒரே ஆணின் மரபில் வந்த வம்சத்தவர்கள் அதனைக்குல தெய்வமாக வணங்குகின்றனர். சில குலதெய்வக்கோயில்களை ஒருவரின் ஆண்வாரிசுகளும், பெண்வாரிசுகளும் இணைந்தும் வணங்குகின்றனர். ஒவ்வொரு குல தெய்வக்கோயிலிலும் 21 பரிவார தெய்வங்களும் சிலகோயில்களில் 42 பரிவாரத் தெய்வங்களும் உள்ளன. ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரில் கோயில் அமைந்திருந்தாலும், எல்லாக் கோயிலின் கருவறையிலும் அய்யன் சாமியே இடம் பெற்றுள்ளது. அய்யன் சாமியே எல்லாத் தெய்வங்களுக்கும் மூலத்தெய்வமாகக் கருதப்படுகின்றது. அந்த அய்யன்சாமியின் வலது, இடதுபக்கங்களில் மற்றபரிவாரத் தெய்வங்கள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. [ஆதாரம்:- பிறமலைக்கள்ளர்கள் வாழ்வும்,லரலாறும் இரண்டாம்பதிப்பு 2012 ஆசிரியர்:- இரா.சுந்தரவந்தியத்தேவன்]
இதில் மதுரைக்கு வந்தேறிய திருநெல்வேலி புதுநாட்டு இடையர்கள் முதலில் எட்டு நாட்டுக் கள்ளர் தலைவன்
பின்னைதேவரின் ஆட்சிப்பரப்பில் தங்கி, திருமலை மன்னர் அனுமதி உத்தரவு பெற்ற பின்னரே மதுரை நகருக்குள் வடக்குப்பகுதிக்குள் குடியேறினர்.
( குறிப்பு:- பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பிறமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர்,பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் வேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.)
எட்டு நாட்டின் 24 உபகிராமங்களில் ஒன்றான விளாச்சேரி கிராமத்தின் மொட்டமலை பகுதியில் திருநெல்வேலி வல்லநாடு புதுநாட்டு இடையர்கள் பிடிமண்ணாக கொண்டு வந்த சாஸ்தா மற்றும் 21 பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்து விட்டனர். சிலர் விளாச்சேரியிலேயே தங்கியும் விட்டனர். சமீப காலம் வரை மொட்டமலை மங்கை காத்த சாஸ்தா கோயில் களரி விழா மற்றும் மற்றைய விழாக்களுக்கு பிறமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 'கொண்டைக் கோடாங்கி'
ஒருவரே வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிறமலைக்கள்ளர் தெய்வங்கள் ஒச்சாண்டம்மன்,நல்லதங்கை முதலிய பல சிறு தெய்வங்களை இந்த புது நாட்டிடையர்கள் தங்கள் குலதெய்வத்தோடு வழிபடத் தொடங்கினர். இடையர் நடுத்தெருவிலுள்ள நல்லமாடன் கோவிலில் பிறமலைக்கள்ளருக்கே உரித்தான ஒச்சாண்டம்மன் வழிபடுவது பற்றி 15.08.2012 ல் நண்பர் ஜகந்நாத பராங்குசர் உதவியோடு கள ஆய்வு செய்த போது தெ.நவநீதகிருஷ்ணக்கோனார் அவர்கள் கூறினார்.
இராமாயணச்சாவடி இடையர்களில் உறியடி திருவிழா நடத்தும் பங்காளிகள் வகையறாக்களின் கோயில் நல்லதங்காள் (அ) நல்லதங்கை கோயில் என்று அழைக்கப்படுகிறது. பிறமலைக்கள்ளர்களின் சிறுதெய்வங்களில் ஒன்றாக நல்லதங்காள் வழிபடப்பட்டவள் ஆவாள். (நெல்லை வள்ளியூர் அருகே) சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் சாஸ்தாவை குலதெய்வமாகக் கொண்ட இந்த உறியடி இடையர்கள் இராமாயணச்சாவடி மேற்கு மதிலருகேயே நல்லதங்காள் கோயிலை
கட்டியுள்ளனர்.
பின்னைதேவரின் ஆட்சிப்பரப்பில் தங்கி, திருமலை மன்னர் அனுமதி உத்தரவு பெற்ற பின்னரே மதுரை நகருக்குள் வடக்குப்பகுதிக்குள் குடியேறினர்.
( குறிப்பு:- பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பிறமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர்,பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் வேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.)
எட்டு நாட்டின் 24 உபகிராமங்களில் ஒன்றான விளாச்சேரி கிராமத்தின் மொட்டமலை பகுதியில் திருநெல்வேலி வல்லநாடு புதுநாட்டு இடையர்கள் பிடிமண்ணாக கொண்டு வந்த சாஸ்தா மற்றும் 21 பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்து விட்டனர். சிலர் விளாச்சேரியிலேயே தங்கியும் விட்டனர். சமீப காலம் வரை மொட்டமலை மங்கை காத்த சாஸ்தா கோயில் களரி விழா மற்றும் மற்றைய விழாக்களுக்கு பிறமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 'கொண்டைக் கோடாங்கி'
ஒருவரே வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிறமலைக்கள்ளர் தெய்வங்கள் ஒச்சாண்டம்மன்,நல்லதங்கை முதலிய பல சிறு தெய்வங்களை இந்த புது நாட்டிடையர்கள் தங்கள் குலதெய்வத்தோடு வழிபடத் தொடங்கினர். இடையர் நடுத்தெருவிலுள்ள நல்லமாடன் கோவிலில் பிறமலைக்கள்ளருக்கே உரித்தான ஒச்சாண்டம்மன் வழிபடுவது பற்றி 15.08.2012 ல் நண்பர் ஜகந்நாத பராங்குசர் உதவியோடு கள ஆய்வு செய்த போது தெ.நவநீதகிருஷ்ணக்கோனார் அவர்கள் கூறினார்.
இராமாயணச்சாவடி இடையர்களில் உறியடி திருவிழா நடத்தும் பங்காளிகள் வகையறாக்களின் கோயில் நல்லதங்காள் (அ) நல்லதங்கை கோயில் என்று அழைக்கப்படுகிறது. பிறமலைக்கள்ளர்களின் சிறுதெய்வங்களில் ஒன்றாக நல்லதங்காள் வழிபடப்பட்டவள் ஆவாள். (நெல்லை வள்ளியூர் அருகே) சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் சாஸ்தாவை குலதெய்வமாகக் கொண்ட இந்த உறியடி இடையர்கள் இராமாயணச்சாவடி மேற்கு மதிலருகேயே நல்லதங்காள் கோயிலை
கட்டியுள்ளனர்.
.....தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்